• Mon. Oct 13th, 2025

புது வருடத்தின் முதலாவது அமர்வு ஆரம்பம்

Byadmin

Jan 7, 2025

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமானது.

2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வாரத்திற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் நடைபெறவுள்ளதுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்குகள் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *