• Sun. Oct 12th, 2025

அரசுக்கு நெல்லை வழங்கினால் மேலதிக பணம்

Byadmin

Jan 19, 2025

அரசாங்க களஞ்சியசாலைகளுக்கு நெல் இருப்புகளை கொண்டு வந்து வழங்கும் விவசாயிகளுக்கு உத்தரவாத விலைக்கு மேலதிகமாக ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 2 ரூபாய் வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் குறிப்பிட்ட அளவு நெல்லை அரசாங்க களஞ்சியசாலைகளுக்கு கொண்டு வந்து வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எம்பிலிப்பிட்டிய நெல் சேமிப்பு வளாகத்தின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அரிசி பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என்று நம்புவதாகக் கூறினார்.

சில மாவட்டங்களில் நெல் கொள்முதல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதி அமைச்சர், நெல்லுக்கு உத்தரவாத விலையை நிர்ணயிப்பதாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *