• Sat. Oct 11th, 2025

காலநிலை குறித்த விசேட அறிவிப்பு

Byadmin

Mar 2, 2025

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

இடி மின்னலின் போது மரங்களுக்கு அடியில் இருத்தலைத் தவிர்க்குமாறும், இடியுடன் கூடிய மழையின் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

இடியுடன் கூடிய மழையின் போது தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதேவேளை மிதிவண்டிகள், டிரக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இடி மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *