இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கௌரவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு’ என்ற திருக்குறளை கூறி அதற்கு நன்றி தெரிவித்தார்.