• Sun. Oct 12th, 2025

புதிய பரீட்சை ஆணையாளர் நியமனம்

Byadmin

May 8, 2025

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சை ஆணையாளராக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளராகப் பணியாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜெயசுந்தரவின் பதவிக்காலம் மே 06, 2025 அன்று முடிவடைந்தது.

இந்நிலையில்   இலங்கை கல்வி நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான ஏ.கே. சுபாஷினி இந்திகா குமாரி லியனகேவை காலியாக உள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகப் பதவிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க, முன்மொழியப்பட்டிருந்தது.

அதன்படி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *