நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை பிற்பகல் வேளையில் மழை பெய்யும் சாத்தியம் நிலவுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.