• Mon. Oct 13th, 2025

டெங்கு வைரசால் இதுவரை 13 பேர் பலி

Byadmin

Jun 5, 2025

நாட்டில் இந்த ஆண்டு (2025) இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக  நிபுணர் டாக்டர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு பரவலில் விரைவான அதிகரிப்பு காணப்படவில்லை என்றாலும், இடைவிடாத மழையுடன் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களில் அதிகரிப்பு காரணமாக பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *