கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் சீதுவ நகர சபை பகுதிகளுக்கும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேச சபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளன.
அத்துடன், கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது.
10 மணிநேர நீர் வெட்டு
