• Mon. Oct 13th, 2025

10 மணிநேர நீர் வெட்டு

Byadmin

Jun 11, 2025

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 
 
அதன்படி, காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் சீதுவ நகர சபை பகுதிகளுக்கும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேச சபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளன. 
 
அத்துடன், கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *