• Mon. Oct 13th, 2025

மரக்கிளை விழுந்ததில் ஒருவர் மரணம், 17 மாணவர்கள் காயம்

Byadmin

Jun 13, 2025

பலாங்கொடை ரஜவக மகா வித்தியாலயத்தில் உள்ள கட்டிடமொன்றின் மீது அருகிலிருந்த மரத்தின் கிளை விழுந்ததில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் காயமடைந்து பலாங்கொடை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்துள்ளது.

12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *