• Sat. Oct 11th, 2025

தயவு செய்து அவதானத்துடன் இருக்கவும்!

Byadmin

Jul 15, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடல் அலைகளின் உயரம் 2.5-3 மீட்டர் வரை அதிகரிக்கலாம் எனவும், இதனால் குறித்த பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *