• Sun. Oct 12th, 2025

மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

Byadmin

Jul 16, 2025

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

தண்ணீரில் மிதந்த குழந்தை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில், குழந்தை உயிரிழந்தது. 

இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. 

கடந்த ஜனவரி மாதமும் மீரா ஓடை குளத்தில் விழுந்து 6 வயது பிள்ளையொன்று உயிரிழந்திருந்தது. 

இந்த இறப்புகளால் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுன்ன அப்பகுதி மக்கள், நேற்று (15) மாலை, “மீரா ஓடை குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அல்லது சுவர் கட்டப்பட வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *