• Sat. Oct 11th, 2025

மாலைத்தீவில் மரக்கன்று நாட்டிய ஜனாதிபதி

Byadmin

Jul 31, 2025

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) பிற்பகல் மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மரக்கன்றொன்றை நாட்டினார்.

இந்த நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu), மாலைதீவு சுற்றுலா மற்றும் சுற்றாடல் அமைச்சர் தோரிக் இப்ராஹிம் (Thoriq Ibrahim) மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *