நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு பாலஸ்தீன கொடி வடிவத்தை கொண்ட மேற்சட்டை அணிந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் உரையாற்றினார்.
எனினும் அவர் தொடர்ந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி சென்ற அவர், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருகையில் பாலஸ்தீன ஆதரவுக்கான குறியீடான தர்பூசணி படங்களை பொறித்த மேற்சட்டையை அணிந்து வந்தார்.