• Sat. Oct 11th, 2025

கொழும்பிலிருந்து சென்ற விமானத்துடன் பறவை மோதல்

Byadmin

Oct 8, 2025

கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *