• Fri. Nov 28th, 2025

மலையக ரயில் சேவையில் மாற்றம்

Byadmin

Nov 26, 2025

சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகளில் புதன்கிழமை (26) அன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு செல்லும் இரவு அஞ்சல் ரயில் சேவை நானுஓயா வரை மட்டுமே இயக்கப்படும்,அதே நேரத்தில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் இரவு அஞ்சல் ரயில் நானு ஓயாவில் நிறுத்தப்படும்.

பயணிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடவும், மேலும் அறிவிப்புகளுக்கு இலங்கை ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *