• Sun. Oct 12th, 2025

பெற்றோல் கையிருப்பிலுள்ள நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு…

Byadmin

Nov 6, 2017

பெற்றோல் கையிருப்பிலுள்ள நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு…

இன்றைய தினமும்(06) பெற்றோல் பெரும் நோக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு புதிதாக எரிபொருள் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுவதோடு, குறித்த நிலையங்களில் உள்ள சேவையாளர்கள் பெற்றோல் வழங்கபப்டும் நேரம் குறித்து சரியாக குறிப்பிட முடியாது என தெரிவிக்கின்றனர்.

எனினும், பெற்றோல் தொடர்ந்தும் வழங்கப்படும் நிரப்பு நிலையங்களில் கூட்ட நெரிசலுடன் சில சில கைகலப்புகளும் நடந்தேறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதிசொகுசு வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதோடு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவைக்கு போதியளவு பெற்றோல் வழங்காது புறக்கணிப்பதாக குற்றஞ் சாட்டட்ப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்கும் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *