ஜனாதிபதியிடம் நெவில் பெர்னாண்டோ விசேட கோரிக்கை..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளரான வைத்தியர் நெவில் நெவில் பிரணாந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதாவது, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் கலந்துரையாட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவுக்கு தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
மேற்குறித்த இந்த கோரிக்கையினை விசேட கடிதம் ஒன்றின் மூலம் அவர் முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.