• Sun. Oct 12th, 2025

இன்னும் 600 ஆண்டுகளில் பூமி கொளுந்துவிட்டு எரியும் – ஸ்டீபன் காவ்கிங் எச்சரிக்கை..!!

Byadmin

Nov 8, 2017

இன்னும் 600 ஆண்டுகளில் பூமி கொளுந்துவிட்டு எரியும் – ஸ்டீபன் காவ்கிங் எச்சரிக்கை..!!

இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கபடி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே வருகிறது.

இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600-ம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும்.

இதனால் பூமியில் உயிரினங்கள் மற்றும் தாவர வகையில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும். அனைத்தும் அழியும். ஆனால் மனிதர்கள் நினைத்தால் இன்னும் 10 லட்சம் ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடியும்.
அதாவது மனிதர்கள் சூரிய மண்டலத்தில் மிக அருகேயுள்ள ஆல்பா சென்டாரி என்ற துணை கிரகத்தில் குடியேறலாம் அல்லது பூமிக்கு அருகேயுள்ள புளூட்டோவுக்கு சென்று தங்கலாம்.

இவற்றில் சூரிய மண்டலத்துக்கு அருகேயுள்ள ஆல்பா சென்டாரி துணை கிரகம்தான் சிறந்தது என கருதுகிறேன். இக்கிரகம் பூமியில் இருந்து 400 கோடி மைல் தொலைவில் உள்ளது. இது செவ்வாய் கிரகத்தை விட குறைந்த தொலைவில் உள்ளது.

இக்கிரகத்துக்கு சிறிய விமானத்தில் ஒரு வாரத்திற்குள் செல்ல முடியும். எனவே அதற்கான ஏற்பாட்டை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *