• Sun. Oct 12th, 2025

பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்

Byadmin

Nov 16, 2017

பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கையில், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் தொகை, குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உரிய எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், அந்த கட்சியின் வேட்பு மனுக்கள் நிச்சயம் நிராகரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *