மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படுகிறது…
குடிநீர் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – 15, மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை வரையான வீதி இன்று(17) இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளது.
இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்குளி – பாம் வீதி பகுதியும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
இதன் காரணமாக மட்டக்குளி விஸ்வைக் சந்தியில் இருந்து பர்கியூஷன் வீதியூடாக மட்டக்குளி பிரதான வீதிக்கு சென்று அங்கிருந்து கதிரானவத்தை வீதியூடாக பாம் வீதிக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது