• Sat. Oct 11th, 2025

பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் ..

Byadmin

Dec 4, 2017 ,

பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் ..

எதிர்வரும் 2018 பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் சனிக்கிழமைஉள்ளூராட்சி மன்ற

தேர்தல் நடைபெறும் என பிரதமர் தெரிவித்தார்.

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி எதிரான மனுக்கள் மீளப்பெறப்பட்டதை அடுத்து, அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில்தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வர்த்தமானிக்கு எதிரான நீதிமன்ற உத்தரவை அடுத்து, 93 உள்ளூராட்சிசபைகளுக்கு மாத்திரம் வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு தேர்தல்ஆணையகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
வர்த்தமானிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கானவேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு 4ஆம் திகதி வெளியிடப்படும் எனதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஏற்கனவே 93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களைகோரி வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் திருத்தம்செய்யப்படவுள்ளது. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும்வேட்புமனுக்களை கோரும் நாட்களை உள்ளடக்கிய புதிய அறிவிப்புதிங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.
அத்துடன், முன்னதாக உள்ளூராட்சித் தேர்தலை ஜனவரி 27ஆம் நாள் நடத்தும்திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டவுள்ளது. பெப்ரவரி மாதத்தின் முதலாவதுசனிக்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும்அதற்கு அடுத்த தினமான 4ஆம் திகதி (04-02-2018) இலங்கையின் சுதந்திரத்தினம் என்பதால் அதற்கு அடுத்த சனிக்கிழமையான பெப்ரவரி 10ஆம் திகதிதேர்தல் நடைபெறுமென தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *