தியதலாவ, கஹகொல்ல பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பு சம்பவத்தாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட தனியார் பஸ் வண்டி, யாழில் இருந்து தியத்தலாவை சென்றதாகவும் இச்சம்பவம் இன்றுகாலை 5:30 மணியளவில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.