(பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் பதவி விலகினார்)
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தன தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.
அவரின் பதவி விலகல் கடிதத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் ஐக்கிய இராச்சியத்திற்கான உதவி உயர் ஸ்தானிகராக பணியாற்றுபவர் பதில் உயர் ஸ்தானிகராக செயற்படுவார் என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. பிரிகேர்டியர் பிரியந்த பெர்னாண்டோ நாட்டிற்கு அழைக்கப்பட்டதின் எதிரொலியா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.