(28ம் திகதி 12 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு)
நீர் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுநாள்(28) காலை 09.00 மணி முதல் வத்தளை, களனி, பேலியகொட, மஹர, பியகம, தொம்பே, ஜா எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.