• Sat. Oct 11th, 2025

அம்பாறை….. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் நடவடிக்கை எடுங்கள்! – மஸ்தான் MP

Byadmin

Feb 28, 2018

(அம்பாறை….. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் நடவடிக்கை எடுங்கள்! – மஸ்தான் MP)

அம்பாறை நகரில் இடம்பெற்ற இனவாதிகளின்  மிலேச்சத்தனமான  தாக்குதலில் புனித பள்ளிவாசல் சேதமடைந்ததுடன் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் கிழக்கு மாகாண பொலிஸ் உயர்அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டதுடன் இன்று அதிகாலை  ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொண்டு ஜனாதிபதிபதியை இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்து குற்றவாளிகளை துரிதமாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *