(“அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – மஹிந்த)
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(07) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டினுள் சமதானத்தை நிலைநாட்டுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.