• Sat. Oct 11th, 2025

தினமும் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் காலை ஊற வைப்பதால் இவ்வளவு நன்மையா..?

Byadmin

Apr 2, 2018

(தினமும் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் காலை ஊற வைப்பதால் இவ்வளவு நன்மையா..?)

குளிர் காய்ச்சல் போன்றவற்றால் பாதிப்படையும் போது உடல் ஆரோக்கியம் இழந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகின்றது.

இதன் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியம் பெறுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகின்றது.

உடலில் ஏற்படும் பல நோய்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலும் இயற்கை முறையில் இலகுவாக மீளப் பெற முடியும். தினமும் 15 நிமிடங்கள் சிறந்த பலன் கிடைக்கும்.

ஒரு பாத்திரத்தில் நீரினை எடுத்து சிறிது ஜஸ் துண்டுகளை போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் காலை ஊற வைக்க வேண்டும்.

தினமும் தூங்குவதற்கு முன்னர் இதனை செய்ய வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து செல்லும் போது ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு தடவை இந்த முறையை பின்பற்ற முடியும்

குளிர்ந்த நீரைப்பயன் படுத்தும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் நோரெபினிஃப்ரைன் இலகுவாக உற்பத்தியாக உதவுகின்றது. குளிர்ந்த நீரினால் ஏற்படும் நன்மைகள்.

ஆரோக்கியமான சருமம். குளிர்ந்த நீரின் சிகிச்சையின் போது சருமத்தின் புறத்தோல், துவாரங்கள் இறுக்கமாகி இரத்தம். கட்டுவதை தடுத்து சருமத்தின் சக்தியை அதிகரிக்கின்றது.

சதைகளை பாதுகாக்கும்

சதைகளை மிருதுவாக்கின்றது.

முடியை பளபளப்பாக்கும்.

குளிர்ந்த நீர் பயன்படுத்துவதனால் மென்மையான பளபளப்பான கூந்தலை பெற முடியும்.

மன அழுத்தத்திற்கு

குளிர்ந்த நீரினால் மன அழுத்தம் போன்ற உணர்வுகளை குணமடைய உதவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *