(நாளை முதல் களனி பாலத்தின் போக்குவரத்து மட்டு)
புதிய களனி பாலத்தின் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து இடைக்கிடை மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை(03) முதல் 05ம் திகதி வரையான நாட்களில் குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்றுப் வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.