ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் வாபஸ் பெற்றது தவறானது – ஒபாமா
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்துகொண்டது.
இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை வாபஸ் பெறும் முடிவு தவறானது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஈரான் அரசு அணுசக்தி ஒப்பந்தத்தை மீறாத நிலையில் இந்த ஒப்பந்தத்தை வாபஸ் பெறுவது என்பது தவறான முடிவு என்றே கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். #IranNuclearDeal #DonaldTrump #BarackObama