(ஆபியா சித்தீக் சிறையிலேயே உயிர் நீத்தார் !)
ஆபியா சித்தீக் உயிர் நீத்தார் !
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
டாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடைந்தார்
*மே 20 2018*
*அமேரிக்காவில் பணியாற்றிய பாகிஸ்தான் வம்சாவளி இஸ்லாமிய டாக்டர் ஆவார்*
*நோயாளிகளை மதம் மாற்றுவதாக போலி குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்*
*கணவரையும் இரண்டு குழந்தைகளைவிட்டும் பிரிக்கப் பட்டார்*
*சிறையிலே சொல்ல முடியாத அத்தனை துன்பங்களையும் கேவலங்களையும் அடைந்தவர்*
*கரண்ட் ஷாக் கொடுக்கப்பட்டார்*
*எத்தனையோ முறை உணர்விழக்கும் வரை துன்பம் இழிவு படவைக்கப்பட்டார்*
*அவரது அலறல் கைதிகளையும் காண்போரையும் கலங்க வைக்கும்*
*இறுதியாக நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட சமயத்தில் உணர்வற்ற பலகீனமான நிலையிலும் தன் தலை திறந்திருப்பதால் அருகில் இருந்தோரிடம் தலைத்துணி வாங்கி தலையை மறைத்த நிகழ்ச்சி அனைவரது கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது*
*இறுதிவரை கணவரையும் குழந்தைகளையும் அவர் காணவில்லை*
*அமெரிக்க சிறையிலிருந்து பாகிஸ்தான் சிறைக்கு மாற்றப்படுவார் என பொய்யான வாக்குறுதியளித்து அரசாங்கம்…*
*அவர் முஸ்லிமாக இருந்தார்… இஸ்லாமிய வாழ்வியலை எடுத்துரைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக இத்தனை ஆண்டுகள் துன்பப்பட்டார்…*
*ஆனால் இன்று சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கும் இப்புனித ரமளான் மாதத்தில் அல்லாஹ் தன் அடியாரை தன் பக்கம் அழைத்துக் கொண்டான்*
*யா அய்யத்துஹன் நஃப்ஸுல் முத்ம இன்னா…*
*(ஓ… சாந்திபெற்ற ஆத்மாவே)*
*இர்ஜிஈ இலா ரப்பிக்கி ராளியத்தம் மர்ளிய்யா(உன் இறைவன் உன்னையும் நீ அவனையும் பொருந்திய நிலையில் அவனிடமே திரும்பச் செல்வாயாக!
யார்_இந்த_ஆபியா_சித்தீக்கி ?
#அதிகம்_பகிருங்கள்
அமெரிக்க சிறையில் சித்திரவதைபடும் முஸ்லிம் விஞ்ஞானி ஆபியா சித்தீக்கி
ஒரு காலத்தில் ஒரு முஸ்லீம்
கொல்லப்பட்டமைக்கு ஒரு
படையையே திரட்டிச்சென்ற
வரலாறுகளை நமக்குள்
வைத்துக்கொண்டு ஜமாத்து
என்றும், ஊர் என்றும் ,குடும்பம்
என்றும் நாடு என்றும் எல்லைகள்
போட்டுக்கொண்டு பிறரால் எள்ளி
நகையாடும் நிலைக்கு ஆளாகி
விட்டோமா ?
இன்றைய மேற்கு
ஊடகங்களாலும் ,ஏன் முஸ்லீம்
ஊடகங்களாலும் கூட
மறைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லீம்
பெண் அறிவாளியின் நிலை பற்றி ,அவரின் திறமை பற்றி ,மறைக்கப்பட்ட
உண்மைகள் பற்றி இதோ இந்த
ஒற்றுமை இல்லாத உம்மாவின்
நிலையை வைத்து சில
வார்த்தைகள் கூறுகிறேன்.
1972 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில்
பிறந்த ஆயிபா சித்தீக்கி.
திறமையான ஒரு பெண்.
சராசரி பாகிஸ்தானிய பெண் போல
அடுப்படிக்குள் நாண் ரொட்டிக்குள் தனது திறமைகளை மறைத்து விடாமல் சமூகத்துக்காக தனது உம்மத்துக்காக தனது மேற்படிப்பை 1990 இல்
அமெரிக்காவின் டெக்சாஸ்
மாநிலத்தில் தொடர்ந்த அவர்
#நரம்பியல்_துறையில் அசாதாரண
திறமையை காட்டினார் .
அவர் தனது பட்டப்படிப்பை முடித்த
பின்னர் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க
பிராண்டைஸ் பல்கலைக்கழகத்தில்
நரம்பியல் துறையில் #கலாநிதி
படிப்பை தொடர்ந்தார்.
தனியே படிப்பில் மாத்திரம் அக்கறையை காட்டாமல் பல சமூக
அமைப்புகளோடு தொடர்பை
ஏற்படுத்திக்கொண்டதுடன் பல
சமூக சேவைகளிலும் ஈடு பட்டு
வந்தார் .
அவரால ஆரம்பிக்கப்பட்ட பல
சமூக அமைப்புகள்,கல்வி
நிறுவனக்கள் இன்றும்
இயங்கிக்கொண்டிருக்கின்றன.
மூன்று பிள்ளைகளின் தாயான (six-year old Ahmed, four-year old Mariam and six-month old Suleiman)
அவர் தனது நரம்பியல் சம்பந்தமான
புதிய கண்டுபிடிப்புகளை
நிகழ்த்திய போது அந்த
பல்கலைகழகம் மூக்கில் விரலை
வைத்தது.
முஸ்லீமாக இருந்ததாலும் அதிலும்
மார்க்கத்தை தினமும்
நடைமுறைப்படுத்தும் முஸ்லீமாக
இருந்ததாலும் அவரது சில
கண்டுபிடிப்புகள் அமெரிக்காவை
விட்டு வெளியே சென்று முஸ்லீம்
உலகில் அதிலும் போராளிகளின்
கையில் சிக்கிவிடும் என்ற
அச்சத்தில் அமெரிக்காவின் எப் பீ ஐ (FBI) அவரை அவதானிக்க தொடங்கியது .
நரம்புகளை செயல் இழக்க
வைக்கும் ஒரு இரசாயனம்
தொடர்பாக அவர் கண்டுபிடித்தமை
அவர் மீதான கவனத்தை ஈர்க்க
வைத்தது
2001 ஆம் ஆண்டில் தனது பீ எச் டீ
(PhD)யை முடித்து கொண்ட ஆயிபா
சித்தீக்கிக்கு பல்டிமோரின் உள்ள
சினாய் மருத்துவமனையில்
வேலை கிடைத்தது .
ஜோன் ஹோப்கிண்ட்ஸ் பல்கலைகழகத்தில்
விரிவுரையாளராக பணியாற்றி
வந்தார்.
2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு
தனது மூன்று சிறிய குழந்தைகளுடன் பயணமானார்.
அந்த பயணம் தான் அவரது வாழ்வில்
பாரிய மாற்றத்தை ஏற்படுத்த
உள்ளது என்று அவருக்கு அன்று
தெரிந்திருக்கவில்லை .
பாகிஸ்தான் சென்ற அவர் ஒரு
வருடத்துக்குள் அதாவது 2003 இல்
அவரது மூன்று குழந்தைகளுடன்
திடீரென காணமல் போனார்.
காணமல் போனார் என்பதை விட
கடத்தப்பட்டார் என்பதே பொருத்தமான
சொல்.
பாகிஸ்தானிய அரசாங்கம்
ஆயிபா காணாமல் போனதற்கும்
தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என
கூறி வந்த போதும் அவரது
கைதுக்கும் கடத்தப்பட்டமைக்கும்
அமெரிக்காவின் முந்தானையை
பற்றிப்பிடிதுக்கொண்ட
அப்போதைய பாகிஸ்தானி அரசே
உதவி செய்தது என்று
ஆதாரத்துடன் கூறப்படுகிறது.
அவரது கணவரின்
மாமனாரான காலித் ஷேய்க்
முஹம்மது கைது செய்யப்பட்டு அமெரிக்க தீவிரவாதிகளால் 183 தடவைகள் waterboarding சித்தரவதை (எனது முந்தைய பதிவில் மேலதிக தகவல் உண்டு) செய்ததை அடுத்து சித்தீக்கி என்ற பெயரை வலுக்கட்டாயமாக உச்சரிக்க வைக்கப்பட்டார்
அடுத்து நரகசித்திரவதைகளின் பின்னர் ஆபியா சித்தீக்கிக்கிக்கு தீவிர
வாதிகளுடன் தொடர்பு இருப்பதாக
காலித் ஒப்புகொள்ள வைக்கப்பட்டார்
அதன் பின்னர் அவரை தேடும் பணி
ஆரம்பமானது என்று அமெரிக்கா
கதை விடுகிறது.
அந்த அமெரிக்காவின் கதையில் 2004 ஆம் ஆண்டின் மே மாதம் அறிவிக்கப்பட்ட மிகவும் தேடப்படும் பயங்கரவாதியாக ஆயிபா சித்திக்கி
இருந்தார்.
அதன் பின்னர் ஜூலை
மாதம் 2008 ஆம் ஆண்டில்
ஆப்கானிஸ்தானில் வைத்து அவர்
அமெரிக்க படைகளால் கடத்தப்பட்டார்.
இந்த கடத்தலின்போது அவரின் ஒரு குழந்தையையும் அமெரிக்க தீவிரவாதிகள் அநியாயமாக கொலை செய்தனர்.
ஏனைய பிள்ளைகள் பாக்கிஸ்தான் conventional children’s prison ல் தள்ளப்பட்டனர்.
#இவர்கள்_செய்த_குற்றம்_என்ன?
கைது செய்யப்பட்ட
வேளை அவர் அமெரிக்க படையினர்
மீது துப்பாக்கி பிரயோகம்
நடத்தினாராம் …அவர் கைது
செய்யப்பட்டாராம் .. இதுதான்
அமெரிக்க கதை .
கடத்தல் சம்பவத்தை அவரது மகன் இவ்வாறு விபரிக்கிறார்
“Her son Ahmed described that his mother was driving a vehicle, taking the family from Karachi to Islamabad, when it was overtaken by several vehicles, and he and his mother were taken into custody. He described the bloody body of his baby brother being left on the side of the road. He said he had been too afraid to ask his interrogators who they were, but that they included both Pakistanis and Americans. He described beatings when he was in US custody. Eventually, he said, he was sent to a conventional children’s prison in Pakistan.”
நடந்தது எல்லாம் இட்டுக்கட்டப்பட்ட
கதை . அமெரிக்காவும்,
சியோனிசமும் நமக்கெல்லாம் ஒரு
பொய் சொல்லும் போது அந்த
பொய்யை நிரூபிக்க பல
பொய்களை சொல்லுவார்கள் .கரைப்பார் கரைத்தால் கல்லும்
கரையும் என்பார்கள்.சில
வேளைகளில் மேற்கு
ஊடகங்களையும், இட்டுக்கட்டப்பட்ட
பொய்களையும்கூட நமை
அறியாமல் நாமே நம்பி
விடுவதுண்டு. அதில் ஒன்றுதான்
செப்டம்பர் 11 .அது அவ்வாறு இருக்க
சித்தீக்காவின் நிஜத்துக்கு
வருவோம்.
2002 இல் பாகிஸ்தான் திரும்பிய
அவரோடு திரும்பியது எப் பீ ஐயும்
தான்.
அவரது ஒவ்வொரு
நடவடிக்கையையும் அவதானித்த
அது பாகிஸ்தானிய அரசின்
உதவியுடன் அவரை கடத்தியது.
உலகில் நரம்பியல் -விஞ்ஞான
துறையில் அதுவும் ஆயிபா
சித்தீக்கி செய்த விசேட துறையில்
விரல் விட்டு எண்ணக்கூடிய
முஸ்லீம்கள் மாத்திரமே உள்ளனர்.
அவர் பாகிஸ்தானில் ஒரு முக்கிய
புள்ளியாக ,பாகிஸ்தானின்
பெருமையாக அப்போது அவர்
கருதப்பட்டார் .
அவர் காணமல் போய்
விட்டார் என்ற செய்திகள்
பாகிஸ்தானில் வெளியாகிய
போது பாகிஸ்தான் மக்கள் அவர்
தொடர்பான தகவலை அந்நாட்டு
அரசாங்கத்திடம் கேட்டனர்,செய்திகள்
எழுதப்பட்டன.ஆர்பாட்டங்கள்
நடத்தப்பட்டன . மக்களில்
நெருக்குதல்கள் பாகிஸ்தான்
அரசை அமெரிக்காவிடம்
முறையிட செய்திருக்கக்
வேண்டும்.
அமெரிக்கவும் நாடகம் ஆட முடிவு
எடுத்தது .அமெரிக்காவின்
கைதியாக இருக்கும் போதே
அவரை தேடப்படும் பயங்கர
வாதியாக சித்திரித்து
அமெரிக்கா. 2005 ஆம் ஆண்டில்
ஆப்கானிஸ்தானின்
தாலிபானுக்கு எதிரான
யுத்தத்திலும் அமெரிக்கா கூறி
வரும் ‘பயங்கர வாதத்துக்கு
எதிரான யுத்தத்திலும் ‘
அமெரிக்காவோடு கூட்டு சேர
வேண்டாம் என்று ஆயிபா
சித்திக்கி பகிரங்கமாக
பாகிஸ்தான் அரசை கேட்டு
ஈமெயில் அனுப்பியதாகையும்
யூதர்களுடனும்,கிருஸ்தவர்களுடனும் கூட்டு சேர வேண்டாம் என்ற
குர்ஆணிய வசனத்தையும்
மேற்கோள் காட்டியதாகவும்
செய்திகளை தயாரித்து
அமெரிக்கா வெளியிட்டு அவரை
இன்னமும் தேடப்படும் பயங்கர
வாதியாக சித்திரித்தது.
தனது காவலில் உள்ள ஒருவரை
தேடப்படும் பயங்கர வாதியாக
காட்டி ஆயிபா சித்தீக்கி ஒரு
பயங்கர வாதி என்று உலகுக்கு ,பாகிஸ்தான் மக்களுக்கு
வருணிக்க வைத்தது அமெரிக்கா.
ஆயிபா சித்தீக்கியையும் அவரது
மூன்று குழந்தைகளையும்
கடத்தியதில் தனக்கு தனிப்பட்ட
தொடர்பு இருப்பதாக மனம்
குறுகுறுத்த பாகிஸ்தானிய
சித்து மகான போலிஸ் அதிகாரி
ஒருவர் அண்மையில்
கூறியுள்ளார்.
முதலில் பாகிஸ்தானிய உளவு பிரிவால் அவர் கைது செய்யப்பட்டு
சித்திரவதை செய்யப்பட்டார் என்று
அந்த அதிகாரி கூறியதுடன்
அமெரிக்க -பாகிஸ்தானிய
அதிகாரிகளே அவரை கைது
செய்து வைத்துக்கொண்டு
காணவில்லை என்றும்
தேடப்படுகிறார் என்றும் கதை
விட்டது என்றும் கராச்சியில் உள்ள
பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு
இது தெரியும் என்றும்
கூறியுள்ளார் .
அவர் தீவிர வாதியும் இல்லை
ஒன்றும் இல்லை அவர் கடத்தப்பட்டு
சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்
என அவரது குடும்பம் கூறி
பாகிஸ்தானிய அரசிடமோ
அமெரிக்கவிடமோ நியாயம்
கிடைக்காது என்று களைத்து
போயுள்ளனர்.
ஆப்கானிதானில் 2008 ஆம் ஆண்டு
ஜூலை மாதம் ஆபியா கைது
செய்யப்பட்டதாக அமெரிக்கா கதை
விட்டது. கைது செய்யப்பட்ட போது
அவரிடம் இருந்த யூ .எஸ் பீ drive இல்
இரசாயன ஆயுதங்கள் ,அமெரிக்க
ஆளில்லாத விமானங்களை
வீழ்த்தும் தகவல்கள் இருந்ததாக
ஆப்கானிஸ்தானை வைத்து கட்டிய
கதையை மெய்யாக்கியது.
பின்னர் அவர் அமெரிக்காவுக்கு
கொண்டு செல்லப்பட்டார் .
இப்போது பயங்கரவாதி என்று பட்டம்
கட்டப்பட்டு பகிரங்கமாக நியூயோர்க்
நகர நீதிமன்றத்தில் கொண்டு
வரப்பட்டார் .
தொடர்ச்சியான சித்திர
வதைகளால் அவரது ஞாபக
சக்தியை இழந்தார் . அல்லது
அவரிடம் இருந்த அரிய அறிவை
மறக்கடிக்க ஞாபக சக்தியைஇழக்க
வைக்கப்பட்டார்
பல தடைவைகள் தான் குற்றவாளி
இல்லை என்று நீதி மன்றத்துக்குள்
கத்தியதால் நீதி மன்றத்தை
அவமதிப்பதாக தொடர்ச்சியாக
அவருக்கு எதிரான வழக்குகள்
பிற்போடப்பட்டன.
தொடர்ச்சியான சித்திரவதையால்
அவரின் உருவம் மாறியது .அழகிய
தோற்றத்தில் இருந்த அவர்
பைத்தியம் பிடித்தவர் போல
ஆக்கப்பட்டார்.
பல தடைவை தனக்கு நீதி தேவை
என்று நீதிமன்றத்துக்குள்
கத்தியதால் மனநிலை
பாதிக்கப்பட்டு விட்டார் என்ற பட்டம்
கட்டப்பட்டது .
சரி மன நிலை பாதிக்கப்பட்டு
விட்டார்தானே இனிமேலாவது
விடுவியுங்கள் என்று பல
மனிதாபிமான ,இஸ்லாமிய
அமைப்புகளால் கேட்கப்பட்ட போது
திடீரென கதை மீண்டும்
மாற்றப்பட்டது .
அவர் நீதி மன்றத்துக்கு முன்னால்
விசாரணைக்கு நிற்க மன ரீதியாக
பாதிக்கப்படாதவர் என கூறி
அவருக்கு 12 வருட சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது .
இதற்கிடையில் சிறையில் அவருக்கு நடக்கும் கொடூரங்கள் நம்மை கதறி அழவைத்துவிடும்
நிர்வாணமாக சித்திரவதை
1000க்கு மேற்பட்ட தடவைகள் கற்பழிப்பு
திறந்த வெட்டவெளியில் பலர் முன்னிலையில் மலசலம் கழிக்க வைத்தல்
சாப்பிடும் உணவுத்தட்டிலேயே ஏனையோரை சிறுநீர்கழிக்கவைத்தல்
இன்னும் பல
இப்போது கூறுங்கள் யார் தீவிரவாதி என்று?
ஒரு முஸ்லீம் பெண்ணை அதிலும்
அறிவாளியான அவரை பிடித்து
கொடுக்க இன்னொரு முஸ்லீம்
துணை போகும் கேவலமான இந்த
நிலைக்கு காரணம் நமக்குள்
இருக்கும் இந்த பிரிவுகளே .நமக்குள் இருக்கும் இந்த
பிரிவுகளை வேறுபாடுகளை,
தான்தோன்றித்தனமான
வேறுபாடுகளை முற்றாக
களைந்து எரியும் வரை
இன்னொரு ஆபியா உருவாக
வெகு காலம் செல்லாது .
இஸ்லாமிய பெண்மணிகளே ஆண்களே உங்கள் பெண் குழந்தைகளை இன்னுமோர் ஆபியாவாக உருவாக்க முயற்சி செய்யுங்கள்
இந்த வேறுபாடுகளை வைத்து நமது
எதிர்கள் புகுந்து விளையாடலாம்.
ஒரு முஸ்லீமை ஒழிக்க இன்னொரு
முஸ்லீமின் துணை இல்லாமல்
முடியாது என்பதை
ஆப்கானிஸ்தானை தாக்க
பாகிஸ்தானும் ஈராக்கை தாக்க
சவூதி ,குவைத்தும் சிரியாவை தாக்க சவூதி தலைமை நாடுகளும் ஆதரவு
அளித்தமை நமக்கு முன்னால்
வாழும் உதாரணங்களாகும் .
இன்று நாம் ஒன்று பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
கிலாபா ராஷிதாவை மீணடும் நிறுவவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை அடி மனதால் ஏற்று அதற்காக வேலை செய்யுங்கள்
அல்லாஹ் துணை புரிவானாக