• Sun. Oct 12th, 2025

கண்டியில் குர்பானை நிறைவேற்ற வேண்டாம், இறைச்சியும் கொண்டு வராதீர்கள்

Byadmin

Aug 13, 2018

(கண்டியில் குர்பானை நிறைவேற்ற வேண்டாம், இறைச்சியும் கொண்டு வராதீர்கள்)

கண்டி நகர் மற்றும் சூழ­வுள்ள பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்கள் இம்­முறை உழ்­ஹியா கட­மையை கண்டி நகர் பகு­திக்கு வெளியே உள்ள பகு­திக்குச் சென்று நிறை­வேற்றுமாறும் உழ்­ஹியா இறைச்­சியை கண்டி நகர எல்­லைக்குள் எடுத்து வர­வேண்டாம் எனவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.
கண்டி வரு­டாந்த எசல பெர­ஹரா வைபவம் நேற்று ஆரம்­ப­மாகி எதிர்­வரும் 26 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளதால் கண்டி நகர எல்­லைக்குள் மிரு­கங்கள் அறுப்­பதும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து இறைச்சி வகைகள் நக­ருக்குள் கொண்டு வரு­வதும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. கண்டி நகர மற்றும் சூழ­வுள்ள முஸ்­லிம்கள் பெரும்­பான்மை இனத்தின் நிகழ்­வான எசல பெர­ஹ­ரா­வுக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டு­மெ­னவும், தடை செய்­யப்­பட்­டுள்­ள­வற்றை கண்டி நக­ருக்குள் மேற்­கொள்ள வேண்­டா­மெ­னவும் ஏனைய மதத்­த­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கும்­ப­டியும் கண்டி மாவட்ட ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உதவித் தலைவர் மௌலவி பஸ்ருல் ரஹ்மான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
மேலும் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது: உழ்­ஹியா கட­மையை நிறை­வேற்றும் முஸ்­லிம்கள் நாட்டின் சட்­டத்­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக தேவை­யான அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­ட­மி­ருந்து  பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
வீடுகளிலும், தனிப்பட்ட இடங்களிலும் மாடுகள் அறுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
-Vidivelli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *