(மற்றுமொரு புழு கண்டுபிடிப்பு – விவசாயத்தை நாசப்படுத்தும் என எச்சரிக்கை)
சேனா என்றழைக்கப்படும் படைப்புழுவைப் போன்று, நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் இன்னொரு வகை படைப்புழுவினமொன்று, திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாவல் நிறத்தையுடைய இந்தப் புழுவின் உடலின் சில இடங்களில், செம்மஞ்சள் நிறமும் கலந்திருப்பதாகவும் இவை, நாற்று இலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிதாக, அப்பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உண்வாக உட்கொண்டிருப்பதுடன் சேனா படைப்புழுவைப் போன்று, பரவிக் கிடப்பதாக, விவசாயிகள் கூறியுள்ளனர்.