• Sat. Oct 11th, 2025

யஹ்யாகானின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Byadmin

Jun 23, 2017 ,

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றும் பொருட்டு,பசித்திருந்து நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக்

கொண்டாடும் முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் விடுத்துள்ள நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நோன்பின் ஊடாக பெற்ற சகிப்புத்தன்மை ​முஸ்லிங்களிடையே அமைதியையும் நிம்மதியையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் இனிய தினமாக இப்பெருநாள் அமைய வேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திக் கொள்கின்றேன் என்றும்,முஸ்லிங்களை அச்சமூட்டும் செயற்பாடுகளும் அச்சுறுத்தல்களும் இலங்கையிலும் முழு உலகிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்இவ்வேளையில் நோன்பின் ஊடாகப்பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அடிமைப்படுத்த எத்தனிப்பவர்களை அடிமையாக முயலவேண்டும் என்றும் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *