• Sun. Oct 12th, 2025

பணம் அச்சிடுவதை உடனடியாக குறைக்க வேண்டும் – பந்துல அறிவுரை

Byadmin

Mar 20, 2022

பணம் அச்சிடப்படுவதை உடனடியாக குறைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில் போதிய புரிதல் இல்லாத மிகவும் பலவீனமான நாடாளுமன்றத்தை தான் கண்டதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பணத்தை அச்சிட்டு வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மத்தியில் ஏன் பகிர்ந்தளிக்கக் கூடாது என்று கூறும் நபர்களும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர் எனவும் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

அப்படி செய்தால், நாட்டின் முழுப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமைக்கு செல்லும் என்பது இவர்களுக்கு புரியவில்லை. இந்த நிலைமையை புரிந்துக்கொண்டு பணம் அச்சிடப்படுவதை கட்டுப்படுத்த நாடாளுமன்றம் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *