நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின், அடுத்த வருடம் இலங்கை பாரிய போசாக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின்போது உள்ளூர் சந்தையில் பால், முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் முறிவு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், கறி கோழி 12.1 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.