லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது கிரிக்கெட் போட்டிகளின் பதிப்பு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி ஒகஸ்ட் 1 முதல் 21 வரை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் நடப்பு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதனை ஒத்திவைக்க பரிசீலித்து வருகிறது.