• Sat. Oct 11th, 2025

ஓமானில் இருந்து 7 பெண்கள் நாடு திரும்பினர்

Byadmin

Jan 8, 2023


ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் சொந்தமான “சுரக்ஷா” வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 07 பேர் இன்று (08) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை 05.21 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

ஓமானில் உள்ள “சுரக்ஷா” இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 118 வீட்டுப் பணியாளர்களில் 11 பேரை இலங்கைக்கு அனுப்புவதற்காக மஸ்கட் விமான நிலையத்திற்கு அழைத்துச் வரப்பட்ட நிலையில் அங்கு ஆவணங்களில் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக அதில் நான்கு பணியாளர்களுக்கு இலங்கை வர வாய்ப்பளிக்கப்படவில்லை.

அவர்கள் வென்னப்புவ, திருகோணமலை, கிண்ணியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *