• Sat. Oct 11th, 2025

பணம் செலுத்தாதவர்களின் ஹஜ் பயணம் ரத்து செய்யப்படும்!

Byadmin

Aug 4, 2017

2017 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு சில யாத்திரிகர்கள், முகவர்களுக்கு பணத்தை செலுத்தாதிருப்பதனால் அவர்களின் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய ஹஜ்குழு தீர்மானித்திருப்ப தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.

பயணத்துக்காக பணம் செலுத்தாத யாத்திரிகர்கள் எதிர்வரும் திங்கட்கிழ
மைக்கு முன்னர் பணத்தை செலுத்த அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவ்வாறு பணம் செலுத்தாவிடின் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஹஜ் பயணத்திற்காக காத்திருப்போரை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடிவெள் ளிக்கு மேலும் தெரிவிக்கையில், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு சவூதி நோக்கி செல்லவுள் ளது. இந்நிலையில், முகவர் களால் அவர்களுக்கு வழங் கப்பட்ட கோட்டாக்களுக்கு அமைய விமான டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன், மக்கா, மதீனா மற்றும் அஸிஸியாவிலும் தங் குமி வசதிகள் ஏற்பாடுகளும் முகவர்களால் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது.

எனினும் ஹஜ் யாத்திரிகர்கள் சிலர் பணத்தை செலுத்தாமையால் சிக்கல்

நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஹஜ் முகவர்களால் அரச ஹஜ் ஏற்பாட்டுக்குழுவுக்கு முறைப் பாடுகள் கிடைக்கப்பெற் றுள்ளது.
இந்நிலையில், நாம் அவ் வாறு பணம் செலுத்தாத யாத்திரிகர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை அவ காசம் வழங்க தீர்மானித்திருக் கிறோம்.
குறித்த தினத்திற்கு முன்னர் யாத்திரிகர்கள் திங் கட்கிழமைக்கு முன்னர் கட்
டாயம் பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு யாத்தி ரிகர்களால் பணம் வழங்கப் படாவிடி குறித்த வெற்றிடத் திற்கு ஹஜ் யாத்திரைக்காக பெயர்களை பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருப்போரை ஹஜ்ஜுக்கு அனுப்புவதற்கு உடனடியான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *