• Sat. Oct 11th, 2025

ஆட்கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் கைது

Byadmin

Feb 7, 2023


ஆட்கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டை, நோனாகம, வெலிபதன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்று அவர்களை லாவோஸுக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் ஒரு நபரிடம் இருந்து சுமார் 19 இலட்சம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தப்பியோடிய சந்தேக நபர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் நேற்று (06) ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தற்போது லாவோஸில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *