• Sun. Oct 12th, 2025

வைத்தியர்களின் பணிபகிஸ்கரிப்பு நிறைவு

Byadmin

Feb 9, 2023

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் நேற்று (08) காலை 8.00 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவடைந்தாலும் தமது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்காவிடின் எதிர்காலத்தில் தமது நடவடிக்கைகளை கடுமையாக்க எதிர்பார்ப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *