இதனையடுத்து குறித்த உறவினர் சத்தம் போட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த விவசாயியை உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
காயமடைந்தவர் ஆனமடுவ வைத்தியசாலையில் இருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த விவசாயி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் ஏற்கனவே வெலிமடை பகுதிக்கு சென்ற மனைவி தொடர்பில் சந்தேகம் எழுந்த விசாரணைகளின் படி சம்பவத்துடன் தொடர்புடைய விவசாயியின் உற்ற நண்பனை கைது செய்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே சம்பவத்தின் மூலகாரணம் கண்டுபிடிக்க முடியும்.
இதன்படி, ஒப்பந்த கொலையாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நீர்கொழுமப்பு பிரதேசவாசிகள் இருவரும் ராகம பொது வைத்தியசாலையில் இரண்டு பொய்யான பெயர்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழுக்களால் கைது செய்ய முடிந்தது.
அதேநேரம், வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மனைவி கைதுசெய்யப்பட்டதுடன், விவசாயியின் கழுத்தை அறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கத்திகள் அருகிலுள்ள ஆற்றில் வீசப்பட்டிருந்தன.