• Sun. Oct 12th, 2025

பரீட்சை எழுத பர்­தாவை நீக்­கு­மாறு பணிக்­கப்­பட்ட விவ­கா­ரத்­திற்கு தீர்வு

Byadmin

Aug 14, 2017

கம்­ப­ளையில் க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­று­வ­தற்கு சென்ற மாண­வி­க­ளுக்கு பர்­தாவை கழற்றி விட்டு பரீட்­சைக்குத் தோற்­று­மாறு பரீட்சை நிலைய அதி­கா­ரிகள் பணிப்­புரை விடுத்த விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணப்­பட்டு தற்­போது மாண­விகள் சுமுக­மான சூழ்­நி­லையில் பரீட்­சைக்குத் தோற்றி வரு­கின்­றனர்.

கம்­பளை கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட  கஹட்­ட­பி­டிய அல்-­மினா முஸ்லிம் மகா வித்­தி­யா­லயம் மற்றும் கம்­பளை நகரில் இயங்கும் சர்­வ­தேச பாட­சா­லை­யொன்றின் மாண­விகள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பரீட்­சைக்குத் தோற்­று­வ­தற்கு சென்றபோது மாண­விகள் பர்­தாவை கழற்­று­மாறு பணிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதனால் முஸ்லிம் மாண­விகள் பர்­தாவை கழற்றிவிட்டு பரீட்­சைக்குத் தோற்­றி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து மாண­வி­களின் பெற்றோர் இது தொடர்­பாக கம்­பளை கல்­விப்­ப­ணி­மனை, பரீட்­சைகள் திணைக்­களம் என்­ப­வற்றில்  முறைப்­பாடு செய்­துள்­ளனர். மேலும்,  பெற்றோர்  கம்­பளை பொலிஸ் நிலை­யத்­திலும் கண்டி மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்­திலும் முறைப்­பாடு செய்­ய­துள்­ளனர்.

இந்­நி­லையில் கல்வி அதி­கா­ரிகள் குறித்த பரீட்சை நிலைய நிரந்­தர பரீட்சை மேற்­பார்­வை­யா­ளரை இட­மாற்ற நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் புதன்­கி­ழமை முதல் குறித்த பரீட்சை நிலையங்களில் மாணவிகள் எதுவித இடையூறுகளும் இன்றி பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-உடு­நு­வர, கம்­பளை  நிரு­பர்கள் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *