களனிவெளி ரயில் மார்க்கத்தின் நாரஹேன்பிட்டியில் இருந்து நாவலை நோக்கிய ரயில் கடவை பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பகுதியளவு மூடப்படும் எனவும், இரவு 8.00 மணி முதல் 10ஆம் திகதி காலை 6.00 மணி வரை முழுமையாக மூடப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
வீதியை மூடும் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் சாரதிகளை கோரியுள்ளது.