ஒரே நாளில் 485 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (15) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 485 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 141 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 163 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 165 பேரும் கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 12 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.