• Sun. Oct 12th, 2025

4 கோடி ரூபாய் ஐஸூடன் காரை விட்டோடிய சாரதி

Byadmin

Jun 17, 2025

ஓட்டுநர் கைவிட்டு தப்பிச் சென்ற சொகுசு காரில் இருந்து, ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடலோர பொலிஸ் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (16) இரவே, காருடன் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்து.

காரில் இருந்து நான்கு பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோ 112 கிராம் ஐஸ் போதைப்பொருள், பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலோர பொலிஸ் பிரிவில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ்  அதிகாரிகள், வேகமாக வந்த காரை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியதால், கார் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் காரைத் துரத்திச் சென்று, புறக்கோட்டை வீதியில் உள்ள முகுடு மாவத்தையில் நிறுத்தினர். ​​ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டபோது,  தப்பியோடிய ஓட்டுநர் ஹோமாகம, பிடிபன வடக்கில் வசிப்பவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *