• Sat. Oct 11th, 2025

சுட்டக்கோழி விவகாரம்: 19 பேருக்கு வாந்தி

Byadmin

Jul 23, 2025

சுட்டக்கோழி (பார்பிக்யூ) இறைச்சி உணவு ஒவ்வாமையால் 10 பெண்கள்  06  ஆண்கள்   சிறுவர்கள் 03 பேரும்  என 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்,  கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நகர சபையின் தலைவர் மஹ்தி அவர்கள் பார்வையிட்டார்.

இதேபோன்று மூதூர் வைத்தியசாலையில் மூவரும் நிலாவெளியில் இருவரும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

செவ்வாய்க்கிழமை (22)அதிகாலை 4.மணியிலிருந்து வயிற்றோட்டம், வாந்தி, அதிக உஷ்ணத்துடனான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படவே  அவதியுற்ற நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் விசாரணைகள் செய்த போது அவர்கள் அனைவரும்   சுட்ட கோழி இறைச்சியுடன் இரவு உணவை சாப்பிட்டதாகவும் அந்த உணவை ஒரே கடையில் வாங்கியதாகவும் கூறுகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்பட்ட இந்த வியாதிகளுக்கு குறிப்பிட்ட அந்த உணவு தான் காரணம் என வைத்தியர்களின் அறிக்கைகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டால் அவ் உணவுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *