• Sat. Oct 11th, 2025

புத்தளம் அரபுக்கல்லூரிகளின் நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில்

Byadmin

Nov 2, 2017 , ,

புத்தளம் அரபுக்கல்லூரிகளின் நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில்

புத்தளம் தில்லையடி பாகியாதுஸ்ஸலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரி, மற்றும் புத்தளம் நூர்நகர் அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரி ஆகியவற்றில் சன்மார்க்க கல்வியை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அஷ்ரபிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி அஷ்ரப் முபாறக் தெரிவித்துள்ளார்.

நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்கும் போது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், மற்றும் பாடசாலை பரீட்சையின் பெருபேறு மற்றும் வேறு சான்றிதழ்கள் இருப்பின் அவைகளுடனும் சமூகமளிக்குமாறு விண்ணப்பதாரர்கள் வேண்டப்படுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-அஸீம் கிலாப்தீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *