“இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உனது பங்கு கபன் மாத்திரமே”. ( இந்தக்கதை உங்கள் வாழ்க்கை)
இமாம் குர்துபி ரஹ்மதுல்லா அவர்கள் கூறினார்கள்.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லா அவர்களோ இவ்வுலக வாழ்வின் மிக அற்பமான இன்பத்தை பின்வரும் கதையின் மூலம் மிக அழகாக எடுத்துரைக்கிறார்கள்.எவ்வாறெனில்,
அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் பயணம் செய்கிறான்.செல்லும் வழியில் காட்டின் சல சலப்பில் அம்மனிதன் திரும்பிப் பார்க்க, தன் பின்னே ஒரு சிங்கம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட அவன் வெருண்டு ஓட ஆரம்பிக்க,அந்த சிங்கம் அவனை துரத்த ஆரம்பிக்கிறது.உயிர்ப் பயத்தில் திக்குத் தெரியாமல் ஓடிய அவன் முன்னே ஒரு பாழும் கிணறு எதிர்ப்பட , செய்வதறியாது ஒரு நொடி திகைக்கிறான்.
கிணற்றின் கீழே பாம்பு இவன் விழும்வரை பார்த்திருக்க,சிங்கம் இவன் மேலே வரும்வரை பார்த்திருக்க, இப்போது அம்மனிதன் பற்றியிருந்த கொடியில் மேலிருந்து ‘கீச் கீச்’ என்ற சத்தத்தோடு இரண்டு எலிகள் அக்கொடியில் வீற்றிருக்க, அம்மனிதன் திகைப்பாய் அவற்றை உற்றுப் பார்க்க, ஒரு கறுப்பு எலியும், வெள்ளை எலியும் தான் பற்றியிருந்த கொடியை அரிப்பதைக் கண்டு தனக்கு வரவிருக்கும் பேராபத்தை நினைத்து பயத்தில் சில்லிட்டுப் போனான்.
இதில் அம்மனிதனை துரத்தும் சிங்கமே நாம் பயப்படும் மரணம்!
அம்மனிதன் விழக் காத்திருக்கும் பாம்புதான் நமக்காக காத்திருக்கும் மண்ணறை!!
அம்மனிதன் பற்றியிருக்கும் கொடிதான் நம் வாழ்க்கை!!!
கறுப்பு, வெள்ளை எலிகள்தான் நம் ஆயுளை அரிக்கும் இரவும்,பகலும்!!!!
அம்மனிதன் சுவைக்கும் தேன் தான் இவ்வுலக வாழ்க்கை!!!!!
எம்.எம்.ஷியாம்
தெலும்புகஹவத்தை,
அக்குறணை