• Sat. Oct 11th, 2025

சாம்சங் போட்டியாக பெரிய ஸ்மார்ட்போன் வெளியிட ஆப்பிள் திட்டம்?

Byadmin

Mar 4, 2018

(சாம்சங் போட்டியாக பெரிய ஸ்மார்ட்போன் வெளியிட ஆப்பிள் திட்டம்?)

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒன்று இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய ஐபோனாக இருக்கும் என கூறப்படுகிறது.
மூன்று ஐபோன்களும் தற்போதைய ஐபோன் X அளவில் இருக்கும் என்றும் இதில் ஒரு மாடலின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு, சில சிறப்பம்சங்கள் அதற்கேற்ப வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக தயாரிப்பு ரீதியிலான சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இவை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய தகவல்கள் குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. எனினும் இந்த திட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக பெரிய திரை மற்றும் அதிநவீன அம்சங்கள் நிறைந்த ஐபோன் இந்த ஆண்டு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவன வருவாய் 6000 கோடி அமெரிக்க டாலர்கள் என்ற வகையில் முந்தைய கணிப்புகளை விட குறைவாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்திலும் ஐபோன் X விற்பனை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேப்லெட் போன்று காட்சியளிக்கும் புதிய ஐபோன் 6.5 இன்ச் அளவு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது ஐபோன் 8 பிளஸ் அளவில், புதிய எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபேப்லெட் D33 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் D32 என்ற குறியீட்டு பெயரில் தற்போதைய ஐபோன் X போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபோன்கள் அனைத்தும் அடுத்த தலைமுறை ஆப்பிள் A-12 பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் இதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வளைவுகள் மற்றும் ஆப்பிள் உயர்-ரக சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *