• Sat. Oct 11th, 2025

மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா

Byadmin

Apr 24, 2018

(மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா)

முஸ்லிம் பெண்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் மார்புகளை மிளிரவைத்து ஹிஜாப்களை அணிவதை காணக்கூடியதாய் உள்ளது, இவர்கள் சிலர் மாலைதீீவை சேர்ந்த பெண்கள் மற்றும் சிலர் ஜாவா முஸ்லிம்கள் ஆனால் அவர்களையும் இலங்கை  முஸ்லிம்களாக பார்க்கும் ஏனைய சகோதரர்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல தயங்கி இருப்போம்.

இன்று பலுான் உடைத்த விவகாரம் அதிகம் பேசப்படுகிறது, இதை விட மோசமான விவகாரங்கள் எல்லாம் நடக்கிற போதும் இது பேம் ஆனதிற்கு காரணம் இந்த மார்பு தெரியும் போட்டோ, நோர்மலாக இந்த போட்டோ இருந்திருப்பின் அந்தளவிற்கு பேசப்பட்டிருக்காது,

அன்புள்ள முஸ்லிம் சகோதரிகளே, தாய்மார்களே,

மார்பு என்பது காட்சிப் பொருளல்ல, அண்ணலார் மறைக்க சொன்ன முக்கிய பகுதி, அது மிளிரும் அளவுக்கு உடைஅணிவது பிழையில்லையா, மார்பு பெரிதாக இருப்பவர்கள் கூட இறுக்கமாக ஆடையணிந்து வீதியில் செல்லும் போது உங்களுக்கு கூசவில்லையா? டீசேர்ட் எடுத்து தலைக்கு மட்டும் ஹிஜாப் கட்டும் உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் எச்சரிக்கவில்லையா?

எல்லாமே நடந்த பிறகுதான் நீங்கள் உணர்வீர்களா? கொழும்பு MC Liberty, Galle Face, KFC, Dinemore, Subway, Burger king, Diyatha Uyana,   Indipendence Squre water park என அனைத்து இடங்களுக்கு பச்சையாக உடுத்திக்கொண்டு வருகிறீர்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

மார்பு என்பது ஆபாசப்பொருளல்ல, அது உங்கள் குழந்தை பால் அருந்தும் இறை அருள் வரும் இடம், உங்கள் தாயிடம் நீங்கள் அருந்தியது அந்தமார்பில்தான். தயவு செய்து மறைத்துக்கொண்டு செல்லுங்கள்.

இஸ்லாம் சொன்ன பிரகாரம் ஆடையணிகலன் உடுத்துங்கள், சுவனபதி செல்லுங்கள்.

(பஹத் ஏ.மஜீத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *